Pages

Friday, September 7, 2012

31 சிந்தனைகள்

# 01


இருப்பிற்கான காரணம் உணர் ;
உணர்வதற்கு நிறையப் படி ;
படிப்பதற்கு நிறையத் தேடு ;
தேடுவதற்காகவே வாழ் !
# 02
  

கண்ணுக்குத் தெரியாத, ஊனமுற்ற ஊமைவிதியிடம் சண்டையிட்டுத் தோற்றுப் போகிறான்; யார் யாரையோ இகழ்ந்துகொண்டே தான் வாழ மறந்து போகிறான் !

# Exclusively மனிதன் !
#03


சில மனித நரிகளின் கைகளில் சிக்கிப் படாத பாடு படுகிறது - அன்பு !
#04


புலம்பல்கள் என்றேனும் ஒரு பிரச்சினை'யையாவது குறைத்திருக்கிறதா/தீர்த்திருக்கிறதா என்று யோசித்து பாருங்கள். புலம்புகிற நேரத்தில் பிரச்சினைகளின் தீர்விற்கான ஆயிரம் வழிகளில் ஒரு வழியாவது யோசித்து வையுங்கள்.
# 05


அன்பைப் பற்றி அரைமணி நேரம் தொடர்ந்து பேசினால். அன்று தான் நான் நிஜமாகவே வாழ்ந்ததைப் போலிருக்கிறது ! அதனால்த்தான் அன்பைக் கட்டியணைத்து வார்த்தையில் விளையாடி மகிழ்கிறேன்... ஒவ்வொரு இரவும்.

I wish everyone should keep an eye on this , For it will really uplift you to atleast some extent. Go call ur soul mates or some one you love so much, and speak with them, or If you prefer Loneliness over Company with someone , Atleast Embrace yourself and end the day with LOVE !
# 06

எல்லா விஷயத்திலும் அதிர்ஷ்ட்டசாலியாகவே இருப்பதும், ஒரு வகையில் துரதிர்ஷ்ட்டவசமானது தான்.
# Cuz, There's a great possibillity of missing out all the real fun of life, when you always recieve something by the favour of luck!

# 07

   
திருட்டுத்தனமாய்
ரசிக்கப் படுகிறேன்
என அறிந்த
அடுத்த நொடியே
சிவாஜி கமலின்
குழந்தைத்
தனமான நடிப்பை
எல்லாம்
முகத்தில் சேர்த்துக்
கொள்கிறேன் !

பின்னாடி யூஸ் ஆவும் !
 
# 25
 

தனிமையின்
மகத்துவம்
மட்டும்
புரிந்துவிட்டால்
நம்
வெறுப்பின்
சுவடுகள்
அழிந்துபோகும் !

When you learn to master the skill of loneliness and if you could feel the profoundness of it., then You will no more Hate any Single Species/soul/ Thing in the world.
 
# 26
 

பாகனைப் போல
பலர் அடித்துத்
துன்புறுத்தினாலும்
திரும்பத் தாக்காமல்
யானையைப்
போல
என்றென்றும்
அன்புக்குக்
கட்டுப்பட்டே
கிடக்கிறார்கள் சில
மனிதர்கள் !
 
# 27
 

எதிர்பார்க்காத ஒன்று, கிடைத்தாலும் ரசிக்கத் தோன்றுவதில்லை ! எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டாலும் அதை நாம் ரசிக்கத் தவறுவதில்லை !
# 28
 
 
பலர் தங்கள் வாழ்க்கையை கனவு மட்டுமே கண்டுகொண்டு, சமுதாயம் என்ன சொல்லுமோ என்று சதா சமுதாயத்திற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
# LIVE UR DREAMS I SAY... U R NOT THE ONE THAT BORN 2 DWELL IN THE DREAMS OF UR SOCIETY BUT URS.
 
# 29 
 

'எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இறங்கவும் நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே'
- வள்ளலார்
● எல்லா உயிர்களையும் தன் உயிராய்ப் பாவித்து, அவற்றின் துயர் துடைத்து அன்பு செய்யுங்கள் ! காலை வணக்கம் !
 
# 30
 

நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும் மீதமிருப்பது ஒரே உயிர் தான் என்ற நிலை வரும் வரை, நம்மை நேசிப்பவர்களின் அருமை நமக்குப் புரியப் போவதில்லை
 
# 31
 

"காதலே பிடிக்காது" என்று வீண் பிடிவாதம் பிடிக்கும் ஆணையும் யாரோ ஒரு அன்பான பெண் அழகாகக் காதலித்து விடுகிறாள் !
    
 

0 comments:

Post a Comment